சமரன்: தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

>> சமரன்: தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!:

செப்டம்பர் -12, தியாகிகள் தினம் !   
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

1980 செப்டம்பர் 12ல், தருமபுரியில் புரட்சித் தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம். 1947 ஆகஸ்ட் போலிச் சுதந்திரத்தை எதிர்த்து உண்மைச் சுதந்திரத்தை வேண்டியும், நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதித் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த தோழர்கள் சாரு, எல்.அப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்களின் தியாகத்தை போற்றும் நாளே இந்நாள். அத்துடன் 1947க்கு முன்பும், பின்பும் இந்திய நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் கனவை நனவாக்க சபதம் ஏற்கும் நாளே இந்நாள்.

புதிய காலனி ஆதிக்கத்தை முறியடிப்போம்!
               மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
                                      மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Donald Trump: சட்டம் தண்டிக்காது விட்ட குற்றவாளி-அ...

President Mahinda Rajapaksa's TOI Interview-100812